துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர் அருகே கல்லூரி மாணவர்கள் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பக்கிங்காம் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வடபழனியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வரும் ஆந்திராவை சேர்ந்த விருக்குமார் (22), அஜய் (22) ஆகிய இருவரும், விடுமுறை நாளான நேற்று பொழுதுபோக்கிற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை கடற்கரைக்கு காரில் புறப்பட்டனர்.சோழிங்கநல்லூரில் இருந்து இசிஆர் இணைப்பு சலையான கலைஞர் சாலையில் உள்ள பக்கிங்காம் கால்வாய் மேம்பாலத்தின் மீது சென்றபோது, கார் இன்ஜின் திடீரென பழுதானதால், பிரேக் பிடிக்காமல் கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.