சென்னை: அரசு உத்தரவை மீறி அதிக கட்டணம் வசூல் செய்த திரையரங்கிற்கு ₹15 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை செம்பியம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜன். இவர், சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் படம் பார்பதற்காக, கடந்த 11.7.2018 அன்று ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்துள்ளார். அப்போது, டிக்கெட் விலை ரூ.150 மற்றும் ஆன்லைன் கட்டணம் ₹35.40 என மொத்தம் ₹185.40 வசூல் செய்துள்ளனர். ஆனால், அரசு உத்தரவின்படி கோயம்பேட்டில் உள்ள அந்த திரையரங்கத்திற்கு குறைந்தபட்சம் கட்டணம் ₹40 அதிகபட்ச கட்டணம் ₹100 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், திரையரங்க நிர்வாகமோ அதனை பின்பற்றாமல் அதிக கட்டணம் வசூலித்தாக கூறி, தேவராஜன் சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார்.