பழநி: பழநி பகுதியில் மக்காச்சோளத்திற்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டவை. இப்பகுதி விவசாயிகள் இங்குள்ள அணைகள் மற்றும் குளங்களை நம்பிபேய விவசாயம் செய்து வருகின்றனர். போதிய மழை இல்லாததால் பழநி பகுதியில் கடந்தாண்டு போதிய அளவு விவசாயம் நடைபெறவில்லை. பெரும்பாலான விவசாயிகள் ஒருபோகம் மட்டுமே நெல் போன்ற பயிர்களை சாகுபடி செய்தனர். இறவை பாசனம் மூலம் பழநி பகுதியில் உள்ள சில விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இவை தற்போது விளைச்சலாகி அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், போதிய விலை கிடைக்காததால் மக்காச்சோள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.