சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று சற்று ஏற்றம்: சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25,000 ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26,000 ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27,000, 28,000, 29,000 என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30,000 ரூபாயையும் தாண்டிய தங்கத்தின் அனைவரும் அதிர்க்குளளாக்கியது.

பின்னர் ஏற்றம், இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கத்தின் விலையில் இன்று சற்று ஏற்றம் காணப்பட்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 17 ரூபாயும், சவரனுக்கு 136 ரூபாயும் உயர்ந்துள்ளது. இதனால், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.3603க்கும், ஒரு சவரன் ரூ.28,824 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் 10 காசு உயர்ந்து 50 ரூபாய் 30 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.50,300க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டதிலிருந்து சுமார் 4,000 ரூபாய் வரை சவரன் விலை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: