திருவண்ணாமலை: 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போளூர் அருகே அரசு பள்ளி ஆசிரியை விடிய, விடிய உண்ணாவிரதம் இருந்தார். அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி, அவர் கண்ணீர் விட்டு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே ஜவ்வாதுமலை ஒன்றியம், அரசவெளி கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உண்டு, உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. இங்கு இடைநிலை ஆசிரியையாக மகாலட்சுமி(40) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஆசிரியை மகாலட்சுமி, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்ற அரசு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கான அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தியும் நேற்று முன்தினம் கருப்பு பேட்ஜ் அணிந்து வகுப்பறைக்கு வந்தார்.
5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு: போளூர் அரசு பள்ளி ஆசிரியை விடியவிடிய உண்ணாவிரதம்: அரசுக்கு கண்ணீர் வேண்டுகோள் வீடியோ வைரல்
- 8 ஆம் வகுப்பு தேர்தல் எதிர்ப்பு
- போலூர் அரசு பள்ளி ஆசிரியர் இறந்தார்
- போலூர் அரசு பள்ளி ஆசிரியர் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு தேர்தல்களில் எதிர்க்கிறார்