தென்காசி: குற்றாலத்தில் நேற்று சுள்ளென வெயில் அடித்த நிலையில் இன்று காலை இதமான சூழல் நிலவுகிறது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்தபோதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே உள்ளது. குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் துவக்கத்தில் சற்று ஏமாற்றினாலும் தற்போது சீசன் காலம் நிறைவடைந்த பிறகும் சாரல் நன்றாக பெய்வதுடன் அருவிகளில் தண்ணீரும் நன்றாக விழுகிறது. நேற்று திடீர் மாற்றமாக சுள்ளென்று வெயில் அடித்த நிலையில் இன்று காலை இதமான சூழல், லேசான மேகமூட்டம் மெல்லிய சாரல் காணப்பட்டது.