கம்பெனி பதிவு செய்த விவகாரம் அதிமுக முன்னாள் எம்பி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி.  இவர் சென்னை, நுங்கம்பாக்கத்தில் இயங்கி வந்த சேரன் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக கடந்த 2004-05ம் ஆண்டுகளில் இருந்தார். கம்பெனிகள் பதிவு துறையிலிருந்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் கம்பெனி பதிவு செய்தது தொடர்பான ஆவணங்கள் எதையும் முறையாக பராமரிக்கவில்லை என்று தெரியவந்தது. இதனால், கே.சி.பழனிசாமிக்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், பழனிசாமி முன்னாள் எம்.பி., என்பதால் அவர் மீதான வழக்கு, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.,க்கள் மீதான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி டி.லிங்கேஷ்வரன் இன்று தீர்ப்பு வழங்க உள்ளார். இது, அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: