சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி. இவர் சென்னை, நுங்கம்பாக்கத்தில் இயங்கி வந்த சேரன் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக கடந்த 2004-05ம் ஆண்டுகளில் இருந்தார். கம்பெனிகள் பதிவு துறையிலிருந்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் கம்பெனி பதிவு செய்தது தொடர்பான ஆவணங்கள் எதையும் முறையாக பராமரிக்கவில்லை என்று தெரியவந்தது. இதனால், கே.சி.பழனிசாமிக்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.