இந்து சமய அறநிலையத்துறையில் அதிரடி 5 செயல் அலுவலர்கள் திடீர் மாற்றம்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை யில் 5 செயல் அலுவலர் கள் திடீரென மாற்றப்பட் டனர். இது குறித்து அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி கூறியுள்ளதாவது: திருச்சி பேட்டைவாய்த்தலை மத்யார்ஜீனேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ராமநாதன் குமாரவயலூர் சுப்ரமணியசுவாமி கோயில், உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோயில் செயல் அலுவலர் அருண்பாண்டியன் பரக்கலக்கோட்டை ெபாது ஆவுடையார் ேகாயில், பேராவூரணி வீரமாகாளியம்மன் கோயில் செயல் அலுவலர் அமரநாதன் நாகை சிக்கல் நவநீதேஸ்வரர் கோயில், மன்னார்குடி மீனாட்சி சொக்கநாதசுவாமி ேகாயில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் திருப்புகலூர் அக்னீஸ்வரசுவாமி கோயில், நாகை திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோயில் செயல் அலுவலர் பரமானந்தம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் முதல்நிலை செயல் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள இந்த செயல் அலுவலர்களை தக்க மாற்று ஏற்பாடுகள் செய்து உடனடியாக பணியில் இருந்து இணை ஆணையர்கள் விடுவிக்க வேண்டும். இந்த செயல் அலுவலர்கள் தங்களது பொறுப்பில் உள்ள அனைத்து கோயில்களின் பொறுப்புகளையும், நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் உட்பட அனைத்தையும் கூடுதல் பொறுப்பு செயல் அலுவலரிடம் முழுமையாக ஒப்படைத்து பின்னர் விடுபட வேணடும். அவர்கள் பொறுப்பு ஒப்படைத்து விட்டு பணி ஏற்கப்பட்டது தொடர்பாக அறிக்கை அனுப்ப வேண்டும் என்று ஆணையர் பணீந்திர ரெட்டி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: