சென்னை: பள்ளிக்கரணையில் பேனர் விழுந்த விபத்தில் பெண் இன்ஜினியர் சுபஸ்ரீ பலியானார். இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பீகாரை சேர்ந்த லாரி டிரைவர் மனோஜ் (25) என்பவரை கைது செய்தனர். சென்னை மாநகராட்சி 189வது வார்டு உதவி பொறியாளர் கொடுத்த புகாரின் பேரில் அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.