பேனர் விழுந்து பெண் பலியான விவகாரம் அதிமுக பிரமுகர் மீது ஜாமீனில் வரமுடியாத பிரிவில் வழக்கு பதிவு

சென்னை: பள்ளிக்கரணையில் பேனர் விழுந்த விபத்தில் பெண் இன்ஜினியர் சுபஸ்ரீ பலியானார். இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பீகாரை சேர்ந்த லாரி டிரைவர் மனோஜ் (25) என்பவரை கைது செய்தனர். சென்னை மாநகராட்சி 189வது வார்டு உதவி பொறியாளர் கொடுத்த புகாரின் பேரில் அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று ஜெயபால் மற்றும் அவரது மைத்துனர் மேகநாதன் ஆகியோர் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில்  வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சட்டப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும்.  இவர்களில் மேகநாதன், பேனர் வைக்க பயன்படும் இரும்பு சட்டம் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: