சென்னை: பள்ளிகளால் பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படக்கூடாது என்று பல கட்டுப்பாடுகளை விதித்து போக்குவரத்து போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர். சென்னையில் பள்ளிகளால் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளை தடுக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில் முதற்கட்டமாக சென்னையில் உள்ள 30 பள்ளிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் ேநற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. போக்குவரத்து இணை கமிஷனர் எழிலரசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் 30 பள்ளிகளை சேர்ந்த 60 பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட முடிவுகளின் விபரம் வருமாறு: