சென்னை: வன வளங்களை பாதுகாக்க தமிழ்நாடு வனத் துறையில் 1,119 வேட்டைத் தடுப்பு காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வனப்பகுதிக்குள் வாழ்வதால், பெரும்பாலும் மலைவாழ் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதோடு மட்டுமின்றி, அடந்த வனப்பகுதியை நன்கு அறிந்துள்ளதன் காரணத்தால், வனப்பகுதிகளில் வன மரங்கள் திருட்டு, வேட்டையாடுதல், நக்சல்பாரிகள் ஊடுருவதைத் தடுத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்கின்றனர். வன வளத்தையும், வன உயிரினங்களையும் பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றனர். இப்பணியாளர்கள் வனத்திற்குள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் வனவளங்களை காக்கும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.