தேவதானப்பட்டி: சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாவட்டத்தில் மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை சிறப்பாக செயல்பட்டுவருகிறது. இந்த பள்ளி வாளாகத்தில் அடர் குறுவனம் அமைக்க திட்டமிட்டனர். அதன்படி மரக்கன்று நடும் இடத்தில் பள்ளந்தோண்டி அதில் தொழுஉரம், மரக்கழிவுகள், பலவகை மண், உள்ளிட்டவற்றை அந்த பள்ளத்தில் போட்டனர். பின்பு அந்த இடத்தை சரி செய்து அந்த இடத்தில் ஒரு மரக்கன்றுக்கு மரக்கன்று நெருக்கமாக நடவு செய்தனர். இதனால் மரம் வளர்ந்தவுடன் குறுவனமாக மாறிவிடும்.