சென்னை: ஆங்கிலம், தமிழ் மொழிப்பாடத் தாள்கள் ஒன்றாக குறைக்கப்பட்டதை அடுத்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான புதிய தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியும் முன்கூட்டியே அரசு வெளியிட்டது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வில் இதுவரை இருந்த மொழிப்பாடங்களில் தலா 2 தாள்கள் என்ற நடைமுறையை மாற்றி இந்த கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு முதல் மொழித்தாள்களில் தலா ஒரு தாள் தான் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது.