சென்னை: இன்ஜினியரிங் கல்லூரி ஆசிரியர் பணிக்கு நுழைவுத்தேர்வை நடத்த உள்ளதாக ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்கரபூதே பேசினார். சென்னையில் நேற்று நடந்த உயர்கல்வி தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் அனில் சகஸ்கரபூதே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கருத்தரங்கில் அவர் பேசிதாவது: இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப புதிய படிப்புகளை கொண்டு வர பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். அதன் அடிப்படையில் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ஒரே படிப்பான பி.டெக். செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் (ஆர்ட்டிபிசியல் இன்டலிஜன்ஸ் அன்ட் டேட்டா சயின்ஸ்) என்ற படிப்பை தொடங்க உள்ளோம்.