போலீசார் பிடிக்க சென்றபோது பிளேடால் கழுத்தை அறுத்து ரவுடி தற்கொலை முயற்சி

பெரம்பூர்: புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (21). இவர் மீது வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலைங்களில் நிலுவையில் உள்ளன. நேற்று முன்தினம் இரவு ஒரு வழக்கு தொடர்பாக மணிகண்டனை பிடித்து விசாரிக்க, புதுவண்ணாரப்பேட்டை போலீசார், அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது, போலீசாருடன் வர மறுத்த மணிகண்டன், “என்னை பிடித்தால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வேன்” எனக் கூறினார். அதையும் மீறி, போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது, மணிகண்டன் கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். இதனால், ரத்தம் கொட்டியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், மணிகண்டனை மடக்கி பிடித்து, பிளேடை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவரை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: