சென்னை: சூளைமேடு சவுராஷ்டிரா நகர் 8வது தெருவை சேர்ந்தவர் பானுமதி. நிறைமாத கர்ப்பிணி. இவரது கணவர் இரவு பணிக்கு சென்று விட்டார். வீட்டில் பானுமதி மட்டும் தனியாக இருந்தார். நேற்று அதிகாலை 2.45 மணிக்கு பானுமதிக்கு பனிக் குடம் உடைந்து பிரசவ வலி எடுத்துள்ளது. குழந்தைக்கு ஆபத்து என்று கருதிய பானுமதி ஆட்டோவை பிடிக்க சாலைக்கு வந்துள்ளார். ஆனால் ஆட்டோக்கள் எதுவும் வரவில்லை. பானுமதியால் வலியால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டு சூளைமேடு நெடுஞ்சாலையில் படுத்தப்படி துடித்தார். அப்போது இரவு ேராந்து பணியில் ஈடுபட்ட சூளைமேடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ரா, பானுமதியின் அழுகுரல் கேட்டு தனது வாகனத்தை நிறுத்தினார். பிரசவ வலியால் துடித்த அவரை தனது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றார். ஆனால் அந்த பெண்ணுக்கு பனிக்குடம் உடைந்து ரத்த போக்கு அதிகமாக இருந்ததால் வாகனத்தில் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது.