பெரியார் சிலைக்கு 17ம்தேதி மரியாதை அதிமுக அறிவிப்பு

சென்னை: பெரியாரின் 141வது பிறந்த நாளையொட்டி, வரும் 17ம் தேதி அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்படுவதாக அதிமுக அறிவித்துள்ளது. அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கை: பெரியாரின் 141வது பிறந்த நாளான 17ம் தேதி காலை 10.30 மணியளவில், சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள அவருடைய சிலைக்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிகழ்ச்சியில், அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: