ஊட்டி: ஊட்டி அருகே காட்டில் ஆண் குழந்தை மீட்கப்பட்டது. அதை, வீசிச்சென்றது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஊட்டி மஞ்சனக்கொரையை சேர்ந்தவர்கள் சகாயமேரி, கீர்த்தி. இவர்கள் நேற்று, அதே பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, வனப்பகுதிக்குள் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது, துணியில் போர்த்தப்பட்ட நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது.