தி.மலை : திருவண்ணாமலையில் நேர்மை உள்ளம் கொண்ட ஷேர் ஆட்டோ ஓட்டூநர் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பணத்தை தொலைத்தவரின் வீடு தேடி வந்து ஒப்படைத்துள்ளது அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. இன்று காலை தனது தம்பியின் திருமணத்தை முடித்துக் கொண்டு, ஷேர் ஆட்டோவில் பயணி ஒருவர் வீடு திரும்பி கொண்டிருந்தார். ஷேர் ஆட்டோவில் பயணம் மேற்கொண்ட பயணியின் பையில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் இருந்தது. ஆட்டோ பயணத்தை முடித்து விட்டு பணம் வைத்திருந்த பையை மறந்து வைத்து பயணி வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது.