சுபஸ்ரீ மரணம் : பேனர் வைத்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் இளம் பெண் சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான பேனர் வைத்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்ற குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ நேற்று உயிரிழந்தார். பேனர் வைத்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை காவல் நிலையத்திலும் மற்றும் பரங்கிமலை போக்குவரத்து காவல் பிரிவினரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: