திருவொற்றியூர்: மணலி பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். கூலி தொழிலாளி. இவரது மகன் ஷியாம் (13), பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்ததும் ஷியாம் வீட்டிற்கு புறப்பட்டான். மணலி சாலையிலிருந்து பெரியார் நகருக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். இங்கு செல்ல பஸ் வசதி இல்லாததால், ஷியாம் பெரியார் நகர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு குடிநீர் லாரியை நிறுத்தி, அதில் ஏரி அமர்ந்து சென்றான். குடிநீர் லாரி சிறிது தூரம் சென்ற போது, எதிரில் ஒரு டிரைலர் லாரி வந்துள்ளது. இதற்காக குடிநீர் லாரியை டிரைவர் குபேந்திரன் (45), சாலை ஓரமாக ஓட்டியபோது, எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது.