சென்னை: செங்கல்பட்டு - சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரையில் இருந்து இன்று, நாளை மற்றும் 17, 20, 21, 24, 27, 28 மற்றும் அக்டோபர் 1, 4, 5, 8, 11, 12, 15, 18, 19 ஆகிய நாட்களில் காலை 9.32, 10.08, 10.56 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் (எண்.40523, 40525, 40527) சிங்கபெருமாள்கோவில் வரை மட்டும் இயக்கப்படும்.மேற்கண்ட தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து காலை 11.30, 12.20 மணிக்கும், திருமால்பூரில் காலை 10.40க்கும் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் ரயில்கள் (எண்.40532, 40534, 40804) பகுதியாக குறைக்கப்பட்டு, சிங்கபெருமாள்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும்.