சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் கிடக்கும் 2 லட்சத்து 21 ஆயிரம் வழக்குகளை விசாரிப்பதற்காக நாளை 513 அமர்வுகளில் லோக் அதாலத் நடைபெற உள்ளது. தேசிய சட்டபணிகள் ஆணை குழுவின் உத்தரவின் படி ஒவ்வொரு வருடமும் மார்ச், ஜூலை, செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் 2ம் சனிக்கிழமையில் நீண்ட நாட்களாக நீதிமன்றங்களில் நிலுவையில் கிடக்கும் வழக்குகளை முடித்து வைப்பதற்காக லோக் அதாலத் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த வருடம் வரும் சனிக்கிழமை 14ம் தேதி(நாளை) தமிழகம் முழுவதும் லோக் அதாலத் நடைபெற உள்ளது. அதில் வழக்கு தொடராமல் சட்டபணிகள் ஆணை குழுவிடம் மனு கொடுத்துள்ள தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகள், எலக்டிரிக், தண்ணீர் பில் தொடர்பான வழக்குகள், பராமரிப்பு தொடர்பான வழக்குகள் என பல்வேறு வழக்குகளும்.