மதுரை: பிளாஸ்டிக் இல்லா தமிழகம் உருவாக அரசு எடுத்த நடவடிக்கையை தொடரக் கோரிய வழக்கில் உள்துறை செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் தற்போதைய நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.