சீர்காழி: சீர்காழி அருகே பாலம் இல்லாததால் இறந்தவர் உடலை வாய்க்காலில் இறங்கி சுமந்து செல்லும் அவலம் தொடர்ந்து வருகிறது. நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா மேலக்கொண்டத்தூர் கிராமத்தில் இறந்தவர்களின் உடல்களை புதைக்கவோ, எரிக்கவோ உடல்களை எடுத்து செல்ல மெயின்ரோட்டில் இருந்து 1 கி.மீ தூரம் செல்ல வேண்டும். இதில் 300 மீ தூரம் வரை வண்டி செல்ல முடியும். இடையில் வெள்ளாழன் வாய்க்கால் இருப்பதால் மீதமுள்ள 700 மீ தூரம் வரை இறந்தவர் உடலை எரிக்க தேவைப்படும் மரக்கட்டைகளை சுமந்துதான் எடுத்து செல்ல முடியும். இதேபோல் இறந்தவர் உடலையும் சுமந்து தான் செல்ல வேண்டும்.