நியூயார்க் : உலக அளவில் ஒவ்வொரு 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்பு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. உலக அளவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினமாக (World Suicide Prevention Day) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்கொலைகள் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. இவர்களில் தூக்கு போட்டும், துப்பாக்கியால் சுட்டும், விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொள்கின்றனர். இத்தகைய முறை கிராமப்புறங்களில் கடைபிடிக்கப்படுகிறது.போர், கொலை, மார்பக புற்றுநோய் ஆகியவற்றிற்கு பறிபோகும் உயிர்களை விட தற்கொலைகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தற்கொலையும் குடும்பம், நட்பு மற்றும் சக ஊழியர்களை பாதிக்கச் செய்வதாக உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ் அதானம் கெப்ரிய சிஸ் தெரிவித்துள்ளார்.