சென்னை: தமிழகத்தில் 3,750 கோடிக்கு முதலீடு செய்ய, துபாய் தொழிலதிபர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று முன்தினம் இரவு துபாய் வந்தார். அவருடன் அமைச்சர்களும் வந்திருந்தனர். தாஜ் ஓட்டலில் நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். ‘பிசினஸ் லீடர் போரம்’ என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் என்எம்சி மருத்துவ குழுமத்தின் தலைவர் தொழிலதிபர் செட்டி பி.எஸ்.எம்.ஹபிபுல்லா உள்ளிட்ட ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றனர் இக்கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘தமிழகத்தில் பல்வேறு தொழில் செய்வதற்கு ஏற்ற வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்’’ என அழைப்பு விடுத்தார்.