வாலிபருக்கு கத்திக்குத்து

சென்னை: மதுபோதை தகராறில் வாலிபரை கத்தியால் குத்திவிட்டு தப்பியவரை போலீசார் தேடி வருகின்றனர். திருவல்லிக்கேணி பல்லவன் சாலை எஸ்.எம். நகரை சேர்ந்தவர் சரத்குமார் (22). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அப்பு என்பவருக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ேநற்று முன்தினம் குடிபோதையில் இருந்த சரத்குமாருக்கும்,  அப்புவுக்கும்  தகராறு ஏற்பட்டுள்ளது.

இருவரையும், அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து விளக்கி விட்டனர். ஆத்திரம் தீராத அப்பு சிறிது நேரத்தில் வீட்டிற்கு சென்று, காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து சரத்குமாரை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.இதில் கன்னம் உள்ளிட்ட இடங்களில்  பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரத்குமார் துடித்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து, திருவல்லிக்கேணி காவல்  நிலையத்தில் சரத்குமார் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு ெசய்து தலைமறைவாக உள்ள அப்புவை தேடி வருகின்றனர்.

Related Stories: