ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி பகுதியில் கியூ பிராஞ்ச் போலீசார் இரவு, பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அதிகாலையில் அரிச்சல்முனை கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து சென்ற ஒருவரை போலீசார் பிடித்தனர். விசாரணையில், இலங்கை வவுனியா பகுதியிலுள்ள செட்டிகுளத்தை சேர்ந்த அருண்ராஜ் (24) என்றும், தலைமன்னாரில் இருந்து அனுமதியின்றி படகு மூலம் அரிச்சல்முனை வந்ததும் தெரிய வந்தது. அவரை மண்டபம் மரைன் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்ற கியூ பிராஞ்ச் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.