சென்னை : உலக வங்கியுடன் இணைந்து தமிழகத்தின் 4 இடங்களில் உலகத்தரம் வாய்ந்த பெண்கள் தங்கும் விடுதிகள் கட்டப்பட உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் பெண்கள் தங்கும் விடுதிகளை அமைச்சர் சரோஜா ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் 28கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் உலகத்தரம் வாய்ந்த பெண்கள் தங்கும் விடுதிகள் கட்டப்பட உள்ளதாக தெரிவித்தார்.