திங்கள்சந்தை: திங்கள்நகர் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி மற்றும் இந்து இயக்கங்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டன. இதில் குருந்தன்கோடு, தக்கலை ஒன்றியங்களில் இந்து முன்னணி மற்றும் இந்து இயக்கங்கள் சார்பில் 300க்கும் மேற்பட்ட சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டன. இதையடுத்து தினமும் பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் நேற்று மாலை அனைத்து சிலைகளும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. இதற்கு பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.