வேளச்சேரி: பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய 47ம் ஆண்டு திருவிழா ஆகஸ்ட் 29ம் தேதி மாலை கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இந்த ஆண்டின் மைய கருத்தாக ‘இறைவனின் நற்கருணை பேழை மரியாள்’ என்ற தலைப்பில் விழா கொண்டாடப்பட்டது.ஆகஸ்ட் 30ம் தேதி இளையோர் விழா, 31ம் தேதி பக்த சபைகள் விழா, செப்டம்பர் 1ம் தேதி நற்கருணை பெருவிழா, 2ம் தேதி தேவ அழைத்தல் விழா, 3ம் தேதி உழைப்பாளர் விழா, 4ம் தேதி நலம் பெறும் விழா, 5ம் தேதி ஆசிரியர்கள் விழா, 6ம் தேதி குடும்ப விழா கொண்டாடப்பட்டதுஇந்நிலையில் நேற்று அன்னையின் ஆடம்பர தேர்பவனி நடந்தது. நிகழ்ச்சிக்கு சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். இதில் குழந்தை இயேசுவை தாங்கிய மாதாவின் திருவுருவ சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி கோயில் வளாகத்தில் இருந்து எலியட்ஸ் கடற்கரை சாலை, முக்கிய சாலைகள் வழியாக சென்று திரும்பியது.