சென்னை: ஊரக ஒன்றிய மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 250 கி.மீ.,க்கு சுற்றுச்சுவர் அமைக்க 144 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. சட்டசபை கூட்ட தொடரில் ஊரக பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகங்களுக்கு 2019-20ம் நிதியாண்டில் 250 கி.மீ,க்கு சுற்றுச்சுவர் மற்றும் வெள்ளத்தடுப்பு சுவர் 144.50 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.