சென்னை: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தாஹில் ரமானியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதற்கு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், தலைமை நீதிபதிக்கு ஆதரவாக திங்கட்கிழமை உயர் நீதிமன்றம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தவும் வக்கீல்கள் முடிவு செய்துள்ளனர்.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தாஹில் ரமானியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.இந்தியாவின் மிகப்பழமையான மற்றும் பெரிய உயர் நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை 3 நீதிபதிகளே உள்ள மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.