பண்ருட்டி: பண்ருட்டி பேருந்து நிலையம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விரிவுபடுத்தப்பட்டது. ஆனால் பேருந்து நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. இலவச குடிநீர் வசதி, பயணிகள் அமர்வதற்கு சிலாப் வசதியும் இல்லை. இதனால் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள் தரையில் அமருகின்றனர். இலவச கழிப்பிட வசதியில்லை. போதிய மின் விளக்கு இல்லாததால், பயணிகள் இரவு நேரங்களில் அச்சத்தில் உள்ளனர். பேருந்து நிற்கும் இடத்தில் ஊர்களின் பெயர்பலகை இல்லை. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் அதிகம் குழப்பமடைகின்றனர். பேருந்துகள் வரிசையாக நிற்காமல் ஒழுங்கற்ற முறையில் நிற்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.