ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலம் மீட்பு

தாம்பரம்: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் அருகே தேனுபுரீஸ்வரர் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோயில், தொல்லியல் துறை மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக 50 சென்ட் நிலம், மாடம்பாக்கம் மூவேந்தர் தெருவில் உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து முள்வேலி அமைத்து இருந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை சேலையூர் காவல் நிலைய போலீசார் உதவியுடன் அறநிலை துறை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். மேலும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு பலகையும் அங்கு வைத்தனர்.

Related Stories: