நாகர்கோவில்: நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மனித உரிமை ஆணையத்துக்கு சென்ற புகார்கள் மீதான 4ம் கட்ட விசாரணை நாகர்கோவில், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மனித உரிமை ஆணைய உறுப்பினரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சித்தரஞ்சன் மோகன்தாஸ் விசாரணை நடத்தினார். இதற்கு 3 மாவட்டங்களில் இருந்தும் புகார் அளித்தவர்கள், காவல்துறை, வருவாய்துறை மற்றும் அரசு துறை அதிகாரிகள் வந்தனர். குறிப்பாக ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான புகார்கள் அதிகளவில் விசாரிக்கப்பட்டன. இதில் முக்கிய புகார்தாரரான அக்ரி பரமசிவம் ஆஜரானார். இவர், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்கள் துன்புறுத்தப்படுவதாக புகார் அளித்திருந்தார். அது தொடர்பாக விசாரணை நடந்தது.