சென்னை: ஏரிக்கரையில் மாடு மேய்த்து கொண்டிருந்த பெண், கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார். முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே காவித்தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால். விவசாயி. இவரது மனைவி கோமதி (37). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இவர்களது வீட்டில் சொந்தமாக மாடுகள் வளர்த்து வருகின்றனர். அந்த மாடுகளை காலை, மாலை வேளையில் கோமதி அதே பகுதியில் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று, அழைத்து வருவது வழக்கம். இந்நிலையில், நேற்றுமுன் தினம் மாலையில் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற கோமதி, இரவு 9 மணியாகியும் வீடு திரும்பவில்லை.