சென்னை: தமிழக அமைச்சர்கள் மேலும் 3 பேர் நேற்று வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ளனர். தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அமைச்சர்கள் யாரும் வெளிநாடு சென்றதில்லை. வெளியூர் செல்ல வேண்டுமானாலும் ஜெயலலிதாவிடம் முன் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும்.ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைச்சர்கள் அனைவரும் சுதந்திரப் பறவையாக மாறிவிட்டனர். முன்பு யாரிடமும் பேச மாட்டார்கள். பத்திரிகையாளர்களைக் கண்டால் ஓடி ஒளிவார்கள். ஆனால் இப்போது பத்திரிகையாளர்களை தேடிப் பிடித்து பேட்டி கொடுக்கிறார்கள். இதனால்தான் பல அமைச்சர்கள் பேசத் தெரியாமல் எதையாவது பேசி மாட்டிக் கொள்கின்றனர்.தற்போது அடுத்த கட்டமாக வெளிநாடு சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளனர். அமைச்சர் ஜெயக்குமார், ஏற்கனவே ஜப்பான் சென்று வந்தார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், ரஷ்யா சென்று வந்தார். தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்காவில் இப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவருடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் சென்றுள்ளனர்.