பல்லாவரம்: சென்னை புறநகரில் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக போரூர், குன்றத்தூர் ஆகிய பகுதிகள் திகழ்கின்றன. நாள்தோறும் பல அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, மக்கள் குடியெறி வருகின்றனர். இதனால், சமீப காலமாக இப்பகுதியில் மக்கள் தொகை கணிசமாக உயர்ந்து வருகிறது. போரூர், குன்றத்தூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் தொடங்கப்பட்டுள்ளதால், வாகன போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக போரூர் - குன்றத்தூர் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனகள் ஊர்ந்து செல்கின்றன.எனவே, இச்சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் இந்த சாலையை விரிவுப்படுத்த, அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பணிகளும் தொடங்கியது. ஆனால், 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணிகள் முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘சாலை விரிவாக்க பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், நெரிசல் ஏற்படுகிறது. பல இடங்களில் சாலையில் கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள், குறிப்பாக தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெண்கள், அடிக்கடி நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.