சென்னை: சென்னை போரூர் அருகே பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் பெரிய குலத்துவான் சேரியை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகில் உள்ள சுடுகாட்டில் அழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக மாங்காடு தடிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் வசந்தகுமாரை அழைத்து சென்ற அஜித்குமார் என்பவரிடம் விசாரணை நடத்தியதில் காட்டுப்பாக்கத்தை சேர்ந்த ஆனந்த், கார்த்திக், மணிமாறன், ராமாபுரத்தை சேர்ந்த சக்திவேல் மற்றும் பரத்குமார் ஆகியோருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.