சென்னை : சென்னையில் கழிவுநீர் உட்கட்டமைப்புகளை புதுப்பித்தல், வலுப்படுத்துதல் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக ரூ.2,371 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் அடையாறு மற்றும் கூவம் நதிகளுக்கான சுற்றுசூழல் சீரமைப்பு திட்டங்கள் நடைபெற்று வருகிறது. கூவம் அடையாறு, பக்கிங்காம் கால்வாய் மற்றும் இதனைச் சேர்ந்த முக்கிய நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை இடை மறித்தல், மாற்று வழிகள் அமைத்தல், புனரமைத்தல் போன்ற பணிகளுக்காக ரூ.2,371 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வர் பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்து இருந்தார்.