சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடல்நலமுடன் உள்ளார் என்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 19ம் தேதி போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். வைகோவை ஓய்வு எடுக்குமாறு டாக்டர்கள் அறிவுரை வழங்கினர். இதனால், அவர் கலந்துகொள்வதாக இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் இரண்டு வாரங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வைகோவை திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.