நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் கொசுபுழு ஒழிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு நேற்று உலக கொசு ஒழிப்பு தினத்தையொட்டி புத்தாக்கபயிற்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த புத்தாக்க பயிற்சியில் கொசுபுழு ஒழிப்பு பணியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பகவதிபெருமாள், மாதவன்பிள்ளை, ராஜா, தியாகராஜன், ராஜேஷ், மாநகராட்சி டாக்டர்கள் காவேரி, மஞ்சு, மேரிலதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் தலைமை வகித்த மாநகர்நல அதிகாரி டாக்டர் கிங்சால் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது. நாகர்கோவிலிலும் இருந்தது. தீவிர நடவடிக்கையின் காரணமாக டெங்கு குறைக்கப்பட்டு உள்ளது.