இன்று ஆன்லைன் கலந்தாய்வு,..நாமக்கல் சட்டக்கல்லூரி 24ம் தேதி துவக்கம்

நாமக்கல்: நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி வரும் 24ம் தேதி துவக்கப்படுகிறது.  இதற்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று நடத்தப்படுகிறது. நாமக்கல் -திருச்சி ரோட்டில் உள்ள டான்சி பெருந்திட்ட வளாகத்தில், புதிய அரசு சட்டக்கல்லூரி  தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மின்துறை அமைச்சர் தங்கமணி நேற்று  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல்லில்  புதிய அரசு சட்டக்கல்லூரி தொடக்க விழா, வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. சட்டக்கல்லூரியில் மாணவ, மாணவியர் சேர்க்கை ஆன்லைன் கலந்தாய்வு 21ம்தேதி(இன்று) முதல் நடைபெறுகிறது. நாமக்கல் அரசு சட்டக்கல்லூரியில் இந்தாண்டு 3 மற்றும் 5 ஆண்டுகள்  சட்ட பட்டப்படிப்பில் தலா 80 மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுகிறார்கள் என்றார்

Related Stories: