சென்னை: சென்னை கடற்கரை - ெசங்கல்பட்டு மார்க்கம், மூர்மார்க்கெட் - அரக்கோணம் மார்க்கம், மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி ஆகிய மார்க்கத்தில் தினசரி 150க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேப்போல், சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் தினசரி 100க்கும் மேற்பட்ட பறக்கும் ரயில்களும் இயக்கப்படுகிறது. ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதாலும், செல்ல வேண்டிய இடங்களுக்கு போக்குவரத்து இடையூறு இல்லாமல் விரைந்து செல்ல முடியும் என்பதாலும் தினசரி 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம் செல்போன் திருட்டு, செயின் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. ரயில் நிலையங்களில் அடிக்கடி இரவில் மின்வெட்டு ஏற்படுவதால் அதை திருடர்கள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டு ரயில் நிலையங்களில் தனியாக நிற்பவர்களிடம் செல்போன் திருட்டு, செயின் பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக ரயில்வே போலீசார் மற்றும் ஆர்பிஎப் போலீசாருக்கு புகார்கள் வருகின்றன.