நெல்லை: நெல்லை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் நடந்து சென்ற முதியவர் ஆற்றில் குதித்தார். லேசான காயத்துடன் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நெல்லை டவுன் அனவரத விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பால சுப்பிரமணியன் (64). வயது முதிர்வின் காரணமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வருகிறார். நேற்று காலை பாலசுப்பிரமணியன், நெல்லை கொக்கிரகுளம் ஆற்றுப்பாலத்தில் தள்ளாடியபடி நடந்து சென்றார். பின்னர் திடீரென ஆற்றுப்பாலத்தில் இருந்து கீழே ஆற்றில் குதித்தார். இதனை அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் மற்றும் ஆற்றில் குளித்து கொண்டிருந்த பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.