சென்னை: அத்திவரதர் வைபவத்தின் போது, இன்ஸ்பெக்டரை திட்டிய காஞ்சிபுரம் கலெக்டர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோர் விளக்கம் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலில் 48 நாள் வைபவம் நடந்து வருகிறது. இதற்காக தினமும் லட்சகணக்கில் பக்கதர்கள் குவிந்து பல மணி நேரம் காத்திருந்து தரிசித்து செல்கின்றனர். இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, திடீரென விவிஐபிகளுக்கான வரிசையில் சோதனை நடத்தினர். அப்போது பலர் பாஸ் இல்லாமல், இந்த வரிசையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறி, அங்கே பணியில் இருந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை கடுமையான வார்த்தைகளால் திட்டினார், மேலும் சஸ்பெண்ட் செய்யாமல் விடமாட்டேன் என்றும், ஒருமையிலும் திட்டி தீர்த்தார். இதனை அருகே இருந்தவர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீட்டியோ சில நிமிடங்களில் பரவி, விவகாரம் மக்களின் விமர்சனத்துக்கு வந்தது. இது குறித்த செய்திகள் நாளிதழ்கள் மற்றும் தொலைகாட்சிகளிலும் வெளியானது.