201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளதாக கூடுதல் செயலர் அபூர்வ வர்மா அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு 201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளதாக கூடுதல் செயலர் அபூர்வ வர்மா அறிவித்துள்ளார். இயல், இசை, நாட்டியத்துறையில் சிறந்து விளங்கும் மேலும் 9 பேருக்கு பாரதி, பாலசரஸ்வதி விருதுகள் வழங்கப்பட உள்ளன. 2011 முதல் 2018 வரையிலான 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை ஒரே நேரத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து நடிகை குட்டிபத்மினி, வயலின் கலைஞர் லால்குடி விஜயலட்சுமி, தவில் வித்வான் பழனிவேல் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படவுள்ளது. மேலும் நடிகர் பாண்டு, ஆர்.ராஜசேகர், பாடகி சசிரேகா, நடன இயக்குனர் புலியூர் சரோஜாவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. லேனா தமிழ்வாணன், கோவி. மணிசேகரன், திருப்பூர் கிருஷ்ணன், கிழம்பூர் சங்கர சுப்பிரமணியன் உள்ளிட்டோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: