காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே ஏரியில் குளித்த போது சேற்றில் சிக்கி இரு சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் சிறுசேரியை சேர்ந்தவர்கள் மோகன்ராஜ் மற்றும் திலீப் ஆகிய இருசிறுவர்கள். இந்த சிறுவர்கள் இருவரும் தங்களது நண்பர்களுடன் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள ஏரியில் குளித்துக் கொண்டிருந்தனர். இதை தொடர்ந்து அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் சேற்றில் சிக்கினர். மேலும் இதை அடுத்து அவர்கள் உடனிருந்த நண்பர்கள் சேற்றில் சிக்கிய சிறுவர்களை கண்டு கூச்சலிட்டனர். இதை தொடர்ந்து சிறுவர்களின் சத்தம் கேட்டு அங்கு கூடிய கிராமத்தினர் அனைவரும் ஏரியில் குதித்து இரு சிறுவர்களையும் மீட்டனர்.